"மாற்றுத் திறனாளிகள் இலவசப் பேருந்து அடையாள அட்டை பெற விண்ணப்பிக்கலாம்'
விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் இலவசப் பேருந்து அடையாள அட்டை பெற விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட மாற்றுத் திறனாளி அலுவலர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் இலவசப் பேருந்து அடையாள அட்டை பெற விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட மாற்றுத் திறனாளி அலுவலர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் இலவசப் பேருந்து அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், கை, கால் பாதிக்கப்பட் டோர், செவித்திறன் குறைபாடுடையோர், மன வளர்ச்சி குன்றிய மாற்றுத் திறனாளிகளுக்கு இலவசப் பேருந்து அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது.
எனவே, நிகழாண்டு இலவசப் பேருந்து பயணச் சலுகை அட்டை பெற விரும்புவோர், விருதுநகர் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகள் அலுவலகத்தில் விண்ணப்பங்களைப் பெற்று கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஏப்ரல் 10 ஆம் தேதிக்குள் திரும்ப வழங்கவேண்டும் என்றார்.