முகப்பு
விருதுநகர்

விஷம் குடித்து கட்டட தொழிலாளி தற்கொலை

ராஜபாளையத்தில் மதுவில் விஷம் கலந்து குடித்து கட்டட தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்து கொண்டார்.

Updated On : 15 மே, 2018 at 12:33 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:33 PM

ராஜபாளையத்தில் மதுவில் விஷம் கலந்து குடித்து கட்டட தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்து கொண்டார்.
ராஜபாளையம் தோப்புப்பட்டியைச் சேர்ந்தவர் நாகலிங்கம்(54).கொத்தனார் வேலை செய்து வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் குடும்பத்தினருக்கு மனவருத்தம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் குடியை மறக்க முடியாமல் ஞாயிற்றுக்கிழமை மதுவில் விஷம் கலந்து குடித்துள்ளார். இதை அறிந்த அவரது மகன் பால்பாண்டி அவரை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு உயிரிழந்தார்.
இது குறித்து அவரது மகன் பால்பாண்டி அளித்த புகாரின்பேரில் தெற்கு காவல் ஆய்வாளர் பவுல் ஏசுதாஸ் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.