அருப்புக்கோட்டை கோட்ட மின்வாரியத்திற்கு உள்பட்ட முத்துராமலிங்கபுரம், வேலாயுதபுரம் பகுதிகளில் திங்கள்கிழமை (நவ.19) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அருப்புக்கோட்டை கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் பி.முத்தரசு சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
அருப்புக்கோட்டை கோட்ட மின்வாரியத்துக்கு உள்பட்ட முத்துராமலிங்கபுரம் துணைமின்நிலையப் பகுதிகளான முத்துராமலிங்கபுரம், பரளச்சி,நரிக்குடி,ராமலிங்கா நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும், மேலும் வேலாயுதபுரம் துணை மின் நிலையப் பகுதிகளான வேலாயுதபுரம் ,வெம்பூர்,பந்தல்குடி தெற்கு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக திங்கள்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என அதில் தெரிவித்துள்ளார்.