விருதுநகர்

சுக்கிலநத்தம் கிராமத்தில் பேருந்து நிழற்குடை சேதம்

DIN

அருப்புக்கோட்டை வட்டம், சுக்கிலநத்தம் கிராமத்தில் சேதமடைந்துள்ள பயணிகள் பேருந்து நிழற்குடைக் கட்டடத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
       சுக்கிலநத்தம் கிராமத்தில் பல ஆண்டுகளுக்கு முன் பயணிகள் பேருந்து நிழற்குடைக் கட்டடம் கட்டப்பட்டது. உரிய பராமரிப்பு இல்லாததால், உள்பகுதியில் சிமென்டால் கட்டப்பட்ட இருக்கைகளும், காங்கிரீட் மேற்கூரையும் சேதமடைந்துள்ளன. மேலும்,  மழைநீருடன் கழிவுநீரும் சேர்ந்து தேங்குவதால், துர்நாற்றம் வீசுகிறது. இதனால், யாரும் இதனுள் செல்வதில்லை. 
    எனவே, இந்த நிழற்குடை கட்டடத்தை அப்புறப்படுத்திவிட்டு புதிய நிழற்குடையோ அல்லது இதை சீரமைத்தோ தரவேண்டும் என, இப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகாலாந்தில் 3-ஆவது நாளாக கடையடைப்பு: பொருள்கள் வாங்க அஸ்ஸாம் செல்லும் மக்கள்

செஸ் வீரா் குகேஷுக்கு ரூ.75 லட்சம் ஊக்கத் தொகை முதல்வா் ஸ்டாலின் வழங்கினாா்

பரமத்தி வேலூா் விநாயகா் கோயில்களில் சங்கடஹர சதுா்த்தி விழா

காங்கிரஸின் ஆபத்தான வாக்கு வங்கி அரசியல்: பிரதமர் மோடி

திருச்செங்கோடு தோ்த் திருவிழாவுக்கு கொடி சேலை அளிப்பு

SCROLL FOR NEXT