விருதுநகர்

வன்னியம்பட்டி பகுதியில் பிப்.15 இல் மின்தடை

DIN

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள வன்னியம்பட்டி பகுதியில்  வெள்ளிக்கிழமை (பிப்.15) மின்விநியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 இதுதொடர்பாக மின்வாரிய கோட்ட செயற்பொறியாளர் எம்.சுடலையாடும் பெருமாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: படிக்காசுவைத்தான்பட்டி துணை மின்நிலையத்தில் வெள்ளிக்கிழமை  மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே அன்றைய தினம் இத்துணை மின்நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் வன்னியம்பட்டி, வைத்தியலிங்காபுரம், கொத்தன்குளம், வன்னியம்பட்டி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, ராஜபாளையம் சாலை, கரிசல்குளம், லட்சுமியாபுரம் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகளும் சீரமைப்பு

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

ராகுலை பிரதமராக்க விரும்பும் பாகிஸ்தான் தலைவர்கள்: பிரதமர் மோடி

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4660 காலியிடங்கள்: 14-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

SCROLL FOR NEXT