விருதுநகர்

விருதுநகரில் மாவட்ட அளவிலான யோகாசனப் போட்டி

விருதுநகரில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கிடையேயான மாவட்ட அளவிலான யோகாசன போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

DIN

விருதுநகரில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கிடையேயான மாவட்ட அளவிலான யோகாசன போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விருதுநகரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் கலந்து கொண்டனர். 
அதில், கததாசனம், மயூராசனம், கால பைரவ ஆசனம், விருச்சக ஆசனம் உள்ளிட்ட பல்வேறு ஆசனங்களை மாணவ, மாணவிகள் செய்து காட்டினர். இதில், சிறப்பாக ஆசனம் செய்தவர்களை நடுவர்கள் தேர்வு செய்தனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு விருதுநகர் மாவட்ட விளையாட்டு அலுவலர் ஜெயக்குமார் ராஜா பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.     இதற்கான ஏற்பாடுகளை கலைக்கோயில் யோகாலயத்தினர் செய்திருந்தனர். முன்னதாக இந்நிகழ்ச்சிக்கு யோகா இளஞ்செழியன் வரவேற்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிபில் ஸ்கோர்! உலா வரும் கட்டுக்கதைகளும் உண்மைகளும்!

ஸ்னிகோ தொழில்நுட்பத்தில் பிழைகள்..! ஆஷஸ் போட்டியில் தொடரும் சர்சை!

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இருதரப்பு உறவுகளுக்கு புதிய உத்வேகம்: பிரதமர் மோடி

மக்களவையில் விபி - ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றம்! நகலைக் கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

SCROLL FOR NEXT