விருதுநகர்

சரக்கு வேன் கவிழ்ந்து 20 பேர் காயம்

DIN


ராஜபாளையம் அருகே திங்கள்கிழமை சரக்கு வேன் கவிழந்து 20 பேர் காயம் அடைந்தனர்.
நெல்லை மாவட்டம், திருவேங்கடத்தில் நடக்கும் பருத்தி அறுவடை பணிக்காக ராஜபாளையம் அருகே உள்ள சுந்தரராஜபுரத்தில் இருந்து கூலித் தொழிலாளர்கள் ஒரு சரக்கு வேனில் திங்கள்கிழமை சென்றுள்ளனர். கொல்லங் கொண்டான் சாலையில் நிலை தடுமாறிய வேன் சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த 20 பெண்கள் காயம் அடைந்து ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து சேத்தூர் ஊரக போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோயில் காவலாளி அடித்துக் கொலை

ஹூதிக்கள் தாக்குதலில் எண்ணெய்க் கப்பல் சேதம்

அமேதி, ரே பரேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்கள் யாா்?: காா்கே பதில்

மண் கடத்தல்: பொதுமக்களை மிரட்டிய நபா் கைது

இரு கட்டத் தோ்தலும் பாஜகவுக்கு சாதகம்: பிரதமா் மோடி

SCROLL FOR NEXT