விருதுநகர்

திருத்தங்கலில் வழிப்பறி செய்தவர் கைது

DIN

திருத்தங்கலில் திங்கள்கிழமை தேநீர் கடைக்காரரிடம் வழிப்பறி செய்தவரை போலீஸார் கைது செய்தனர்.
திருத்தங்கல் மேலத்தெருவைச் சேர்ந்தவர் மாரீஸ்வரன் (30). இவர் அப்பகுதியில் தேநீர் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் இவர் கடையிருந்து வீட்டிற்கு சென்றபோது, மர்ம நபர் ஒருவர் வழிமறித்து கத்தியைக் காட்டி, அவர் பையில் வைத்திருந்த ரூ.600-ஐ பறித்துக்கொண்டு தப்பியோட முயன்றார். 
அப்போது, அக்கம்பக்கம் உள்ளவர்களின் உதவியோடு, அந்த நபரை பிடித்து மாரீஸ்வரன் போலீஸாரிடம் ஒப்படைத்தார். விசாரணையில் அந்த நபர் திருத்தங்கல் செம்பட்டையன் என்ற ஜெகதீஸ்வரன் (24) எனத் தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீஸார் வழக்குப்பதிவு செய்து ஜெகதீஸ்வரனை கைது செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சூறைக் காற்று: செங்கத்தில் வாழைகள் சேதம்

நெல் மூட்டைகள் தாா்ப்பாய்களை போட்டு மூடியிருக்க வேண்டும்: காஞ்சிபுரம் ஆட்சியா் அறிவுறுத்தல்

பண்ருட்டியில் வெள்ளரிப்பழம் விலை அதிகரிப்பு

மழை வேண்டி சிவனடியாா்கள் கிரிவலம்

புகையிலைப் பொருள்கள் கடத்தியவா் கைது

SCROLL FOR NEXT