விருதுநகர்

சிவகாசி அருகே பட்டாசுத் தொழிலாளி கொலை

DIN

சிவகாசி அருகே பட்டாசுத் தொழிலாளி அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டது புதன்கிழமை தெரியவந்தது.
திருத்தங்கல் ஊறிஞ்சிகுளம் கண்மாயில் ஒரு ஆண் சடலம் கிடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீஸார் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். சடலத்தில் பல இடங்களில் அரிவாளால் வெட்டப்பட்டிருந்த காயம் இருந்தது. 
மேலும் இது குறித்து போலீஸார் மேற்கொண்ட விசாரணையில்,  இறந்தவர் முதலிபட்டி காமராஜபுரம் காலனி முருகன் மகன் செந்தில்குமார் (30) என்பதும், பட்டாசுத் தொழிலாளி என்பதும் தெரியவந்தது. செந்தில்குமாருக்கு மனைவி லட்சுமி, இரு ஆண் குழந்தைகள் உள்ளனர். இதுகுறித்து சிவகாசி கிழக்குப் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றுமுதல் மெட்ரோ ரயில் நிலையங்களில் புதுப்பிக்கப்பட்ட வாகன நிறுத்தக் கட்டணம்

வட தமிழக உள் மாவட்டங்களில் 3 நாள்கள் வெப்ப அலை வீசும்

ஆவடியில் ரௌடிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும்

போலி ஆவணங்கள் தயாரித்து ரூ. 31 லட்சம் நிலம் மோசடி: 2 பேர் கைது

இன்ஃப்ளூயன்ஸா: மத்திய அரசு தீவிர கண்காணிப்பு

SCROLL FOR NEXT