விருதுநகர்

ராஜபாளையத்தில் வாகனம் மோதி முதியவர் பலி

DIN

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் திங்கள்கிழமை இருசக்கர வாகனத்தில் சென்ற முதியவர் அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தார்.
நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் பகுதியை சேர்ந்தவர் வேதமாணிக்கம் (57). இவர் திங்கள்கிழமை தனது இருசக்கர வாகனத்தில் சதுரகிரி மலைக்கு சாமி கும்பிட சென்று கொண்டிருந்தார். 
ராஜபாளையம் - சங்கரன்கோவில் சாலையில் வந்தபோது, நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
 அப்போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் வேதமாணிக்கம் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து ராஜபாளையம் தெற்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம் ஆத்மி பிரசாரப் பாடலுக்கு தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம்

கிரிக்கெட்டே வாழ்கை, வாழ்க்கையே கிரிக்கெட்!

ஏற்காட்டில் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களிடம் இபிஎஸ் நலம் விசாரிப்பு

தமிழக, கேரள கடலோரப் பகுதிகளில் முதல் முறையாக அதீத அலை எச்சரிக்கை!

மீண்டும் இணைந்த ‘ஜோ’ பட கூட்டணி!

SCROLL FOR NEXT