விருதுநகர்

இரு சக்கர வாகனத்துக்கு தீ வைப்பு: சிறுவன் மீது வழக்கு

DIN


விருதுநகர் அருகே வெள்ளிக்கிழமை நள்ளிரவில் இரு சக்கர வாகனத்துக்கு தீ வைத்ததாக சிறுவன் மீது போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
 விருதுநகர் அருகே உள்ள ரோசல்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட கே.கே.எஸ்.எஸ்.என். நகரை சேர்ந்த சரவணன் மகன் மணி கண்டன் (21). பெயிண்ட் அடிக்கும் தொழிலாளியான இவர், வெள்ளிக்கிழமை இரவு வீட்டு முன்பு தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்தினார். இந்நிலையில், நள்ளிரவில் அந்த வாகனம் தீயில் எரிவதைக் கண்டு அவரது தாயார், மகனிடம் தெரிவித்துள்ளார். 
இதையடுத்து மணிகண்டன் வெளியில் வந்து பார்த்தபோது, பாண்டியன் நகர் மல்லி கிட்டங்கி தெருவை சேர்ந்த சிறுவன், வாகனத்துக்கு தீ வைத்தது தெரிய வந்தது. 
இது குறித்து மணிகண்டன் அளித்தப் புகாரின் பேரில் அச்சிறுவன் மீது பாண்டியன் நகர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சந்தேஷ்காளி சம்பவம் பாஜகவின் திட்டமிட்ட சதி: திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு

அமெரிக்கா: 17 பேரைக் கொன்ற செவிலிக்கு 760 ஆண்டுகள் சிறை

வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு நடவடிக்கை

விவசாயத்துக்கு தினமும் 12 மணி நேரம் மின்சாரம் வழங்கக் கோரிக்கை

கொளுத்தும் வெயிலால் மின் தடை மக்கள் தவிப்பு

SCROLL FOR NEXT