விருதுநகர்

சிவகாசி பொறியியல் கல்லூரியில் ரூ.1.18 கோடி கல்வி உதவித் தொகை வழங்கல்

DIN


சிவகாசி மெப்கோசிலங் பொறியியல் கல்லூரியில் மாணவர்களுக்கு சனிக்கிழமை ரூ. 1.18 கோடி கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.
 படிப்பில் சிறந்து விளக்கும் மாணவர்களுக்கும், விளையாட்டு, கலை மற்றும் சிறந்த கண்டுபிடிப்புகளை கண்டு பிடித்த மாணவ- மாணவிகளுக்கும், விடுமுறை எடுக்காமல் 100 சதவீத நாள்கள் கல்லூரிக்கு வந்த மாணவர்களுக்கும், மாநில மற்றும் தேசிய 
விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று, வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் கடந்த மூன்று ஆண்டுகளாக மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக கல்லூரி நிர்வாகம் சார்பில் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இவ் விழாவுக்கு முதல்வர் எஸ்.அறிவழகன் தலைமை வகித்தார்.
கல்லூரித் தலைவர் கே.எம்.ராமலிங்கம் 738 மாணவ, மாணவிகளுக்கு ரூ. 1.18 கோடி கல்வி உதவித் தொகை வழங்கினார்.
நிகழ்ச்சியில் தாளாளர் ஏ.டென்சிங், செயலாளர் டி.சிங்காரவேல், நிர்வாகக் குழு உறுப்பினர்கள் ஏ.ராமமூர்த்தி, ஜி.அபிரூபன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேலூரில் தூய்மைப் பணியாளர் மீது மோதிய இருசக்கர வாகனம்: மரித்துப்போனதா மனிதம்?

வெப்பத்தின் பிடியில் சிக்கிய ராஜஸ்தான்!

ஓ மை ரித்திகா!

சென்டாயா, ஜெனிஃபர் லோபஸ்.. ஆடையலங்கார அணிவகுப்பில் ஹாலிவுட் கதாநாயகிகள்!

ஃபிளாப்! தோல்வியைச் சந்தித்த நடிகர்!

SCROLL FOR NEXT