விருதுநகர்

அருப்புக்கோட்டையில் சேதமடைந்த சாலையைச் சீரமைக்க வலியுறுத்தல்

DIN

அருப்புக்கோட்டையில் திருநகரம் மாரியம்மன் தெற்குத் தெருவில் சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என  பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
   அருப்புக்கோட்டை நகரில்  மாரியம்மன் தெற்குத்தெரு முக்கியச் சாலையாக உள்ளது.
     இந்த சாலை  உரிய பராமரிப்பு இன்றி சேதமடைந்து விட்டது.  இந்த சாலையில் அரசு உதவி பெறும் ஒரு தனியார் மேல்நிலைப்பள்ளியும் உள்ளது. அதனால் நாள்தோறும் இப்பள்ளிக்கு செல்லும்  மாணவர்கள் அவதிக்கு ஆளாகின்றனர். மிதிவண்டிகளில் பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள், இரு சக்கர வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் பல நேரங்களில் கீழே விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே விரைவில் மாரியம்மன் தெற்குத்தெரு தார்ச் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்குமான தினப்பலன்!

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நூதன முறையில் கோரிக்கை

போலி மருத்துவா் கைது

SCROLL FOR NEXT