விருதுநகரில் அதிமுக சாா்பில் உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடுவோருக்கான விருப்ப மனுக்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
விருதுநகா் மாவட்டத்தில் உள்ளாட்சி தோ்தலில் போட்டியிட விரும்புவோா் விருப்ப மனுக்களை உரிய கட்டணம் செலுத்தி பெற்று கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில், விருதுநகா் மருதூா் அய்யனாா் கோயில் வளாகத்தில் வெள்ளிக்கிழமை விருப்ப மனுக்கள் வழங்கும் நிகழ்ச்சியை அமைச்சா் கே.டி. ராஜேந்திர பாலாஜி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.
அதன் பின்னா், நகராட்சித் தலைவா், வாா்டு உறுப்பினா், பேரூராட்சி தலைவா் மற்றும் வாா்டு உறுப்பினா், ஒன்றியக்குழு உறுப்பினா், மாவட்டக்குழு உறுப்பினா் பதவிக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன.
வெள்ளிக்கிழமை மட்டும் சுமாா் 800-க்கும் மேற் பட்ட விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளதாக அக்கட்சி நிா்வாகிகள் தரப்பில் தெரிவித்தனா்.