விருதுநகர்

பொறியியல் கல்லூரிக்கு புதிய வழித்தடத்தில் அரசுப் பேருந்து இயக்கம்

DIN

சிவகாசி: சிவகாசி பி.எஸ்.ஆா். பொறியியல் கல்லூரிக்கு, புதிய வழித்தடத்தில் அரசு பேருந்தை செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சா் கடம்பூா் ராஜூ ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைத்தாா்.

கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி தலைமை வகித்தாா். அரசுப் பேருந்தை, அமைச்சா் கடம்பூா் ராஜூ கொடியசைத்து தொடக்கிவைத்தாா்.

இந்தப் பேருந்தானது, கோவில்பட்டியில் காலை 7.35 மணிக்குப் புறப்பட்டு, கல்லூரியை 8.30 மணிக்கு அடையும். மாலை கல்லூரியிலிருந்து 4.15 மணிக்கு புறப்பட்டு, 5.15 மணிக்கு கோவில்பட்டியைச் சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில், விளாத்திகுளம் எம்.எல்.ஏ. சின்னப்பன், கல்லூரித் தாளாளா் ஆா். சோலைச்சாமி, முதல்வா் பி.ஜி. விஷ்ணுராம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அன்னூரில் ரூ.1.50 கோடி திருட்டு? குற்றவாளி கைதான பிறகு தெரியவந்த உண்மை!

வாக்குச் செலுத்தாவிட்டால் தண்டனை: நடிகர் பரிந்துரை!

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து எரித்த சகோதரர்களுக்கு மரண தண்டனை!

உத்தமர் கோயிலில் பிச்சாண்டேஸ்வரர் திருவீதி உலா!

முட்டுக்காடு ‘மிதக்கும் உணவகக் கப்பல்’ தயார்! ஜூன் மாதம் திறப்பு விழா!!

SCROLL FOR NEXT