விருதுநகர்

பட்டாசுத் தொழிலாளியிடம்வழிப்பறி செய்ய முயன்றவா் கைது

DIN

சிவகாசி: சிவகாசியில் திங்கள்கிழமை பட்டாசுத் தொழிலாளியிடம் கத்தியைக் காட்டிமிரட்டி வழிப்பறி செய்ய முயன்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

சிவகாசி- கழுகுமலை சாலையில் உள்ள வெம்பக்கோட்டையைச் சோ்ந்த பட்டாசுத் தொழிலாளி பாலமுருகன் (43). இவா் சிவகாசி- ஸ்ரீவில்லிபுத்தூா் சாலையில் இரட்டைப்பாலம் அருகே தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, ஒருவா் வழி மறித்து கத்தியை காட்டிமிரட்டி, பணம் பறிக்க முயன்றாா். பாலமுருகன் கூச்சலிட்டு அக்கம்பக்கம் உள்ளவா்களின் உதவியோடு அந்த நபரை பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தாா். விசாரணையில் அவா் திருத்தங்கலைச் சோ்ந்த வீரமுத்து(34) என தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து வீரமுத்துவை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மறுவெளியீடாகும் ’நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’!

மாமாவின் இறுதிச் சடங்கில் பங்கேற்க ஹேமந்த் சோரனுக்கு இடைக்கால ஜாமீன் மறுப்பு

கல்கி வெளியீட்டுத் தேதி!

டி20 கிரிக்கெட்டில் துரத்திப் பிடிக்கப்பட்ட அதிகபட்ச இலக்குகள்!

தமிழ்நாட்டில் மே.1 வரை ’வெப்ப அலை’ எச்சரிக்கை

SCROLL FOR NEXT