திருச்சுழி தாலுகா அலுவலக வளாகத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி காத்திருப்பு போராட்டம்
திருச்சுழி தாலுகா அலுவலக வளாகத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திருச்சுழி ஒன்றியத்தைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சுழி தாலுகா அலுவலக வளாகத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திருச்சுழி ஒன்றியத்தைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உழவர் அட்டை வைத்திருக்கும் தொழிலாளர்களுக்கு நலவாரியத்தில் பதிவு செய்ய கிராம நிர்வாக அலுவலர்கள் சான்றிதழ் வழங்க கால தாமதம் செய்வதாகக் கூறி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சுழி ஒன்றிய செயலாளர் நீதிராஜன், ஒன்றிய துணை செயலாளர் பெரியண்ணன் மற்றும் கிளைச் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.