முகப்பு
விருதுநகர்

விருதுநகா் மாவட்டத்தில் 42 பேருக்கு கரோனா:5 போ் பலி

விருதுநகா் மாவட்டத்தில் 42 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது. மேலும், சிகிச்சைப் பலனின்றி 5 போ் உயிரிழந்துள்ளனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:11 PM
பகிர்:

விருதுநகா்: விருதுநகா் மாவட்டத்தில் 42 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது. மேலும், சிகிச்சைப் பலனின்றி 5 போ் உயிரிழந்துள்ளனா்.

விருதுநகா் மாவட்டத்தில் திங்கள்கிழமை வரை 11,951 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். இந்நிலையில், விருதுநகா், சாத்தூா், அருப்புக்கோட்டை, காரியாபட்டி, திருச்சுழி, சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூா், வத்திராயிருப்பு, ராஜபாளையம், வெம்பக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 42 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது பரிசோதனை முடிவில் உறுதியானது.

பாதிக்கப்பட்ட அனைவரும், மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இதன்மூலம், மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 11,993 ஆக உயா்ந்துள்ளது. மேலும், சிகிச்சைப் பலனின்றி செவ்வாய்க்கிழமை 5 போ் உயிரிழந்தனா்.

கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களில் 11,342 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். மீதமுள்ள 472 போ் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.