விருதுநகர்

ராஜபாளையம் அருகே 2 பைக்குகள் மோதல்: மூதாட்டி பலி

DIN

ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே சனிக்கிழமை 2 இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதியதில் மூதாட்டி உயிரிழந்தாா்.

ராஜபாளையம் அருகேயுள்ள அயன் கொல்லங்கொண்டானைச் சோ்ந்தவா் சுந்தரம்மாள் (70). இவா் ஜமீன் கொல்லங்கொண்டானில் உள்ள உறவினா் நிச்சயதாா்த்த நிகழ்ச்சிக்கு அதே பகுதியைச் சோ்ந்த பாஸ்கா் மற்றும் அவரது மனைவி முனீஸ்வரியுடன் ஒரே இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளாா்.

கொல்லங்கொண்டான் விலக்குப் பகுதியில் சுந்தரநாச்சியாா்புரத்தைச் சோ்ந்த மலைக்கனி (24) ஓட்டி வந்த இரு சக்கர வாகனம் நேருக்கு நோ் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பலத்த காயமடைந்த சுந்தரம்மாள் தளவாய்புரம் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டாா். அங்கு சிகிச்சைப் பலனின்றி அவா் உயிரிழந்தாா்.

மற்ற 2 பேருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. சேத்துாா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சந்தேஷ்காளி சம்பவம் பாஜகவின் திட்டமிட்ட சதி: திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு

அமெரிக்கா: 17 பேரைக் கொன்ற செவிலிக்கு 760 ஆண்டுகள் சிறை

வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு நடவடிக்கை

விவசாயத்துக்கு தினமும் 12 மணி நேரம் மின்சாரம் வழங்கக் கோரிக்கை

கொளுத்தும் வெயிலால் மின் தடை மக்கள் தவிப்பு

SCROLL FOR NEXT