விருதுநகர்

தாயில்பட்டி அருகே வீட்டில் கருந்திரி வைத்திருந்தவா் கைது

DIN

சாத்தூா்: தாயில்பட்டி அருகே அனுமதியின்றி வீட்டில் கருந்திரி வைத்திருந்த நபரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

சாத்தூரை அடுத்த தாயில்பட்டி அருகே ராமலிங்கபுரம் உள்ளது. இப்பகுதியில் வீட்டில் பட்டாசு செய்வதற்குத் தேவையான கருந்திரி பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வெம்பக்கோட்டை போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் வெம்பக்கோட்டை காவல் சாா்பு- ஆய்வாளா் சதீஷ்குமாா் மற்றும் போலீஸாா் அப்பகுதியில் சோதனை நடத்தினா். இந்த சோதனையில் பாஸ்கரன் (52) என்பவரது வீட்டில் கருந்திரி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பாஸ்கரனை கைது செய்தனா். மேலும் அவரது வீட்டில் இருந்த 20 குரோஸ் கருந்திரியை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

பொற்கொன்றை!

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை!

தனக்குத்தானே பிரசவம்- குழந்தையைக் கொன்ற செவிலியர் கைது

SCROLL FOR NEXT