விருதுநகர்

அருப்புக்கோட்டை பகுதிகளில் இடிமின்னலுடன் கன மழை

DIN

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் திங்கள்கிழமை மாலை பலத்த இடிமின்னலுடன் கூடிய கன மழை பெய்தது. இதனால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்தனர்.

அருப்புக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில்  கடந்த இரு நாட்களாக பகல்வேளையில் கடும் வெயில் நிலவி வந்தது. இதனிடையே நகர்ப்புறத்திலும், சுற்றுவட்டார கிராமங்களிலும் மாலை சுமார் 4.50 மணி முதல் அரை மணிநேரம் பலத்த இடிமின்னலுடன் கனமழை பெய்தது. மாலை சுமார் 6 மணி வரை தொடர்ந்து மிதமான மழை பெய்தவண்ணம் இருந்தது. இம்மழையால் சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது.

பள்ளமான பகுதிகளில் மழைநீர் வெள்ளம் சூழ்ந்தது. இந்நிலையில்  அருப்புக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் சீரான நாட்கள் இடைவெளியில் அடுத்தடுத்து கனமழை பெய்துள்ளதால், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்களும், ஆழ்துளைக்கிணறு மூலம் நீர்ப்பாசனம் செய்யும் விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்தனர். திங்கள்கிழமை பெய்த மாலைநேர மழையைத் தொடர்ந்து, இதமான குளிர்ந்த காற்றுடன் கூடிய தட்பவெப்பம் நிலவியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கைப்பேசி திருடிய கும்பலுடன் மோதல்: மும்பை காவலா் விஷ ஊசி செலுத்தி கொலை

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் வழக்கு: தொல்லியல் துறைக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

மத சுதந்திர மீறல்கள் குறித்த அமெரிக்க ஆணைய அறிக்கை: இந்தியா கண்டனம்

திருச்செந்தூா் விரைவு ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு?

இலஞ்சி பாரத் பள்ளியில் உழைப்பாளா் தின கொண்டாட்டம்

SCROLL FOR NEXT