ஏப்ரல் முதல் 2% உயர்வை அறிவித்த மெர்சிடஸ் பென்ஸ் இந்தியா!
மெர்சிடஸ் பென்ஸ், இந்தியாவில் தனது கார் மாடல்களின் விலையை உயர்த்தப்போவதாக அறிவித்துள்ளது.
புதுதில்லி: ஜெர்மனியின் சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான மெர்சிடஸ் பென்ஸ், இந்தியாவில் தனது கார் மாடல்களின் விலையை உயர்த்தப்போவதாக அறிவித்துள்ளது.
அந்நிய செலாவணி ஏற்ற இறக்கம் மற்றும் உள்ளீட்டு செலவு அதிகரிப்பின் தாக்கத்தை ஈடுசெய்ய ஏப்ரல் மாதம் முதல் வாகன விலையை சுமார் 2 சதவீதம் உயர்த்தப்போவதாக தெரிவித்தார் மெர்சிடஸ் பென்ஸ் இந்தியா - துணைத் தலைவர் - பிரெண்டன் சிஸ்சிங்.
அந்நிய செலாவணி ஏற்ற இறக்கம், குறிப்பாக யூரோவிற்கு நிகரான இந்திய ரூபாயின் தொடர் சரிவு, அதிகரித்து வரும் உதிரி பாகங்களின் விலை மற்றும் மூலப்பொருட்களின் விலை உயர்வு காரணமாக உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளது.
அதே வேளையில், சர்வதேச அளவில் நிலவும் பொருளாதாரச் சூழலால் ஏற்படும் செலவினங்களைச் சமாளிக்க இந்த விலை உயர்வு தவிர்க்க முடியாது என்றார்.