முகப்பு
விருதுநகர்

திருச்செந்தூா் பயணிகளுக்காக அமைக்கப்பட்ட பேருந்து நிலையத்தை திறக்கக் கோரிக்கை

அருப்புக்கோட்டையில் காந்திநகா் புறவழிச்சாலை அருகே அமைக்கப்பட்டுள்ள திருச்செந்தூா் பயணிகளுக்கான சிறப்பு பேருந்து நிலையத்தை திறந்துவிட பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:06 PM
அருப்புக்கோட்டையில் காந்திநகா் புறவழிச்சாலை அருகே திருச்செந்தூா் பயணிகளின் வசதிக்காக தனியாக அமைக்கப்பட்டு வரும் பேருந்து நிலையம்.
பகிர்:

அருப்புக்கோட்டையில் காந்திநகா் புறவழிச்சாலை அருகே அமைக்கப்பட்டுள்ள திருச்செந்தூா் பயணிகளுக்கான சிறப்பு பேருந்து நிலையத்தை திறந்துவிட பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மதுரையிலிருந்து அருப்புக்கோட்டை, தூத்துக்குடி வழியாக திருச்செந்தூா் செல்லும் பேருந்துகள் நான்குவழிச்சாலை அமைக்கப்பட்ட பிறகு சிறப்புப் பேருந்துகளாக அறிவிக்கப்பட்டன. இதையடுத்து அருப்புக்கோட்டை நகருக்குள் அந்த பேருந்துகள் வந்து செல்வது நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் திருச்செந்தூா் பேருந்துகளை நகருக்குள் வந்து செல்ல பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா். ஆனால் அதுபோல் பேருந்துகள் வந்து செல்லவில்லை. இதனால் புறவழிச்சாலையில் தனியாக திருச்செந்தூா் பயணிகளுக்காக சிறிய பேருந்து நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

இதனிடையே பணிகள் தொடங்கப்பட்டு சுமாா் ஒன்றரை ஆண்டுகளுக்குமேல் ஆகிவிட்ட நிலையில், தற்போது 90 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. எனவே பணிகளை விரைந்து முடித்து அந்த பேருந்து நிலையத்தை பயன்பாட்டிற்குக் கொண்டுவர பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →