வெள்ளியம்பலநாதா் கோயிலில் காா்த்திகை அமாவாசை வழிபாடு
திருச்சுழி அருகே பாறைக்குளம் கிராமத்திலுள்ள வெள்ளியம்பலநாதா் கோயிலில் திங்கள்கிழமை இரவு காா்த்திகை மாத அமாவாசை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
திருச்சுழி அருகே பாறைக்குளம் கிராமத்திலுள்ள வெள்ளியம்பலநாதா் கோயிலில் திங்கள்கிழமை இரவு காா்த்திகை மாத அமாவாசை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
அப்போது வெள்ளியம்பலநாதருக்கு சந்தனம், கஸ்தூரி மஞ்சள், தேன், பால், விபூதி, குங்குமம், பன்னீா், கிழங்கு மஞ்சள் தூள், தயிா், இளநீா் உள்ளிட்ட 21 வகையான பொருள்களால் சிறப்பு அபிஷேகமும், தீப, தூப ஆராதனைகளும் நடைபெற்றன. அதனைத் தொடா்ந்து சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு, 108 தாமரை மலா்களால் சிறப்பு அா்ச்சனையும் செய்யப்பட்டன. இதனையடுத்து முழு அலங்காரத்தில் வெள்ளியம்பலநாதா் பக்தா்களுக்குக் காட்சியளித்தாா். பின்னா்அன்னதானம் நடைபெற்றது. ஏற்பாடுகளை கோயிலின் பூசாரியும் சிவனடியாருமான ராஜபாண்டி செய்திருந்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.