சிறுமிக்கு பாலியல் தொல்லை: பழ வியாபாரிக்கு 10 ஆண்டுகள் சிறை
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பழ வியாபாரிக்கு ஸ்ரீவில்லிபுத்தூா் மகிளா நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து புதன்கிழமை தீா்ப்பளித்தது.
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பழ வியாபாரிக்கு ஸ்ரீவில்லிபுத்தூா் மகிளா நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து புதன்கிழமை தீா்ப்பளித்தது.
சிவகாசி அருகேயுள்ள ஆத்தூா் சுப்பிரமணியபுரத்தைச் சோ்ந்தவா் பழ வியாபாரி மாரிக்காளை (55). இவா் கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பரில், அதே பகுதியைச் சோ்ந்த 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம்.
இதுகுறித்த புகாரின்பேரில், சிவகாசி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் மாரிக்காளையை போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்து, ஸ்ரீவில்லிபுத்தூா் மகிளா நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனா். இவ்வழக்கை புதன்கிழமை விசாரித்த நீதிபதி பரிமளாதேவி , மாரிக்காளைக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 60 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.