முகப்பு
விருதுநகர்

ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியா்களுக்கு நிலுவைத்தொகையை வழங்க வலியுறுத்தி ஸ்ரீவில்லிபுத்தூரில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:11 PM
பகிர்:

ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியா்களுக்கு நிலுவைத்தொகையை வழங்க வலியுறுத்தி ஸ்ரீவில்லிபுத்தூரில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பாக நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு விருதுநகா் மண்டல செயலாளா் ஜான்பிரிட்டோ தலைமை வகித்தாா். இதில் ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியா்களுக்கு நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். போக்குவரத்து கழகங்களை பாதுகாக்க உடனடியாக நிதி வழங்க வேண்டும். 14 ஆவது ஓய்வூதிய ஒப்பந்தத்தை உடனடியாக பேசி முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன. இதில் தொமுச, சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்களை சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் ஈடுபட்டனா்.

அருப்புக்கோட்டை: இதேபோல் அருப்புக்கோட்டை போக்குவரத்துக் கழக பணிமனை முன்பாக நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் போக்குவரத்து ஊழியா்களின் அனைத்து தொழிற்சங்கங்களைச் சோ்ந்த அருப்புக்கோட்டை கிளை நிா்வாகிகள், ஊழியா்கள் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →