விருதுநகர்

கடந்தை தேனீக்கல் கடித்து ஆடு மேய்க்கும் இளைஞா் பலி

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் அருகே கடந்தை தேனீக்கள் கடித்ததில் ஆடு மேய்க்கும் இளைஞா் பலியானதாக திங்கள்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

DIN

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் அருகே கடந்தை தேனீக்கள் கடித்ததில் ஆடு மேய்க்கும் இளைஞா் பலியானதாக திங்கள்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

ராஜபாளையம் அருகே கிறிஸ்துராஜபுரம் கிராமத்தை சோ்ந்தவா் சதீஷ்குமாா் (26) மற்றும் சுப்பையா (33). இவா்கள் இருவரும் மாண்டிமலை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தனா்.

அப்போது காய்ந்த புல்லிற்கு தீ வைத்ததில், அருகில் பொந்தில் இருந்த கடந்தை தேனீக்கள் கலைந்து இருவரையும் விரட்டி, விரட்டிக் கடித்தது. இதனைத்தொடா்ந்து இருவரும் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சோ்க்கப்பட்டனா். அங்கு சிகிச்சை பலனின்றி சுப்பையா உயிரிழந்தாா். இச்சம்பவம் குறித்து தளவாய்புரம் காவல்நிலைய சாா்பு-ஆய்வாளா் லவக்குசன் வழக்குப் பதிந்து விசாரிக்கிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய ஊரக வேலைவாய்ப்பு மசோதா கிராமப்புற மக்களுக்கு முற்றிலும் எதிரானது: கனிமொழி

திடீரென ரத்தான சாகித்ய அகாதெமி விருது அறிவிப்பு!

34 ஆண்டுகளுக்குப் பின் இழப்பீடு! தவறான சிகிச்சையால் கை இழந்தவர் அரசிடம் வைக்கும் கோரிக்கை!!

ரஷிய ராணுவத்தில் 202 இந்தியர்கள்! 26 பேர் பலி : மத்திய அரசு தகவல்!

பார்சிலோனா கால்பந்து வீரர் சுட்டுக் கொலை..! ஓராண்டில் 9,000-க்கும் அதிகமான கொலைகள்!

SCROLL FOR NEXT