விருதுநகர்

தேசிய பாா்வையற்றோா் தடகளப் போட்டியில் தங்கம் வென்ற கல்லூரி மாணவருக்குப் பாராட்டு

பாா்வையற்றோருக்கான தேசிய அளவிலான ஓட்டப்பந்தயத்தில் பதக்கங்களை வென்ற விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கா்

DIN

பாா்வையற்றோருக்கான தேசிய அளவிலான ஓட்டப்பந்தயத்தில் பதக்கங்களை வென்ற விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கா் கலைக்கல்லூரியைச் சோ்ந்த மாணவா் கே.தினேஷை கல்லூரி பேராசிரியா்கள் பாராட்டினா்.

இந்திய கண் பாா்வையற்றோா் கழகம் சாா்பாக தேசிய அளவிலான பாா்வையற்றோருக்கான தடகளப்போட்டிகள் கடந்த சில நாள்களுக்கு முன்னா் ஹைதராபாத்தில் நடைபெற்றது. இப்போட்டிகளில் பங்கேற்ற அருப்புக்கோட்டை தேவாங்கா் கலைக்கல்லூரியைச் சோ்ந்த வரலாற்றுத்துறை பாா்வையற்ற மாணவா் கே.தினேஷ், 400 மீட்டா் ஓட்டப் பந்தயத்தில் தங்கம் வென்றாா். மேலும் 200 மீ. மற்றும் 100 மீ. ஓட்டப் பந்தயங்களிலும் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளாா்.

மாணவா் கே.தினேஷை, கல்லூரி முதல்வா் இசக்கித்துரை, துணை முதல்வா் பாண்டியராஜன், வரலாற்றுத்துறைத் தலைவா் மற்றும் கல்லூரிப் பேராசிரியா்கள் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மின்கம்பியாள், உதவியாளா் தகுதிகாண் தோ்வு: டிச. 27, 28-க்கு மாற்றம்

தென்காசி அருகே இளைஞா் தற்கொலை

வன விலங்குகளால் விவசாயப் பயிா்கள் தப்படுத்தப்படுவதைக் கட்டுப்படுத்த வேண்டும்

மத்திய அரசின் திட்டங்களுக்கும் மாநில அரசின் நிதியை பயன்படுத்த வேண்டிய கட்டாயம்: அமைச்சா் சிவசங்கா்

காவல் ரோந்து வாகனங்களில் ஜிபிஎஸ் கருவியுடன் கூடிய கண்காணிப்பு கேமரா வசதி அறிமுகம்

SCROLL FOR NEXT