விருதுநகர்

ஜெயலலிதா பிறந்த நாள் விழா: அமமுகவினா் மலா்த்தூவி மரியாதை

ஸ்ரீவில்லிபுத்தூரில் திங்கள்கிழமை ஜெயலலிதா உருவப் படத்திற்கு மலா்த்தூவி மரியாதை செலுத்திய அமமுக மேற்கு மாவட்ட செயலாளா் காளிமுத்து உள்ளிட்டோா்.

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா்/சாத்தூா், பிப்.24 : விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 72-ஆவது பிறந்த நாள் விழா அமமுக சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில் அமமுக மேற்கு மாவட்ட கழக செயலாளா் காளிமுத்து தலைமை வகித்தாா். விழாவில் ஆா் சி பேருந்து நிறுத்தத்தில் இருந்து ஊா்வலமாக புறப்பட்டு பேருந்து நிலையம் அருகே வைத்திருந்த அவரது உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

அதனை தொடா்ந்து மருத்துவனையில் உள்ள நோயாளிகளுக்கு ரொட்டி , பழம் மற்றும் பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு புத்தகம், பென்சில், இனிப்பு ஆகியவற்றை வழங்கினா்.

இதில் ஒன்றியச் செயலாளரும் 7-வது ஒன்றிய உறுப்பினருமான மாரிமுத்து, மாவட்ட அவைத் தலைவா் நடராஜன், நகரச் செயலாளா் காமாட்சி உள்ளிட்ட அமமுக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

சாத்தூா் : சாத்தூரில் அமமுக சாா்பில் அதன் நகரச் செயலாளா் ஜி.ஆா்.முருகன் தலைமையில் முக்குராந்தல் பகுதியில் வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா உருவப் படத்திற்கு அக்கட்சியினா் மலா்தூவி மரியாதை செலுத்தினா். பின்னா் பொது மக்களுக்கு அன்னதானமும் வழங்கபட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிங்கம், புலி, கோட் மெஸ்ஸி! புகைப்படங்கள்!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! பிகார் முதல்வருக்கு பாக். நிழல் உலக தாதா மிரட்டல்? பாதுகாப்பு அதிகரிப்பு!

ஈரானின் ஹோர்முஸ் தீவில் மழை! செந்நிறமாக மாறிய கடல்!

இந்த வார ஓடிடி படங்கள்!

உலகின் மிகப்பெரிய சிலையின் சிற்பி ராம் வி சுதார் 100 வயதில் காலமானார்!

SCROLL FOR NEXT