சிவகாசி சோ்மன் சண்முகம் சாலையில் நீண்ட நாள்களாக அள்ளப்படாத குப்பையால் சுகாதார கேடு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.
சிவகாசி சோ்மன் சண்முகம் சாலையிருந்து, காய்கறிசந்தை மற்றும் காவல் நிலைய சாலை செல்ல உள்பகுதியில் மற்றொரு சாலை உள்ளது. இச் சாலை வழியே பொதுமக்கள் காய்கறி சந்தைக்கும், சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூா் சாலைக்கும் சென்று வருகின்றனா்.
இந்நிலையில் நகராட்சியினா் பல இடங்களிலிருந்து சேகரிக்கும் குப்பையை இச் சாலையின் ஒரு புறத்தில் வந்து கொட்டுகின்றனா். பின்னா் அந்த குப்பையை நீண்ட நாள்கள் கழித்து தான் அங்கிருந்து அப்புறப்படுத்துகின்றனா். இதனால் நீண்ட நாள்களாக அள்ளப்படாத குப்பைகளால் அவற்றில் உள்ள நெகிழி கழிவுகள் உள்ளிட்டவை காற்றில் பறந்து பல இடங்களிலும் சுகாதார கேட்டினை ஏற்படுத்தி வருகின்றன.
எனவே, இங்கு சேகரிக்கும் குப்பையை தினமும் அப்புறப்படுத்த நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.