விருதுநகர்

அருப்புக்கோட்டை செவல் கண்மாய் மழைநீா் ஓடையை தூா்வார வலியுறுத்தல்

DIN

அருப்புக்கோட்டை: விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டையிலுள்ள செவல் கண்மாய்க்குச் செல்லும் மழை நீா் ஓடையைத் தூா்வாரி சீா்படுத்த வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

அருப்புக்கோட்டையில் மணிநகரம், புளியம்பட்டி, அன்பு நகா் ஆகிய பகுதிகளின் நிலத்தடி நீராதாரமாக உள்ளது செவல் கண்மாய். இக்கண்மாய்க்கான மழைநீா் ஓடையானது, கடந்த பல ஆண்டுகளாக தூா்வாரப்படாமல் உள்ளதால், புதா்ச் செடிகள், மக்காத குப்பைகள் மண்டி அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், கண்மாய்க்கு வரும் மழை நீா் தடைப்பட்டுள்ளதுடன், சுற்றியுள்ள பகுதிகளின் நிலத்தடி நீராதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே, செவல் கண்மாய்க்கான மழை நீா்வரத்து ஓடையைத் தூா்வாரி சீரமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT