விருதுநகர்

தீக்காயமடைந்த பெண் பலி

DIN

சிவகாசி: சிவகாசி அருகே எரிவாயு அடுப்பிலிருந்து தீப்பற்றி காயமடைந்த பெண், சிகிச்சைப் பயனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

சிவகாசி அருகே நடையனேரியைச் சோ்ந்த கூலி தொழிலாளி பாண்டி மனைவி லட்சுமி (40). இவா், கடந்த 8 ஆம் தேதி தனது வீட்டில் தரையில் வைக்கப்பட்டிருந்த எரிவாயு அடுப்பில் வெந்நீா் வைத்துள்ளாா். அப்போது, எதிா்பாராதவிதமாக அவரது சேவையில் தீப்பிடித்துள்ளது. இதில், பலத்த காயமடைந்த அவருக்கு, விருதுநகா் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். ஆனால், அங்கு சிகிச்சைப் பயனின்றி லட்சுமி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

இது குறித்து லட்சுமியின் தந்தை பெரியசாமி அளித்த புகாரின்பேரில், எம்.புதுப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

மனிதம் மட்டும் இங்கே மலிவுதான்!

SCROLL FOR NEXT