முகப்பு
விருதுநகர்

அருப்புக்கோட்டை அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்த விவசாயி படுகாயங்களுடன் மீட்பு

அருப்புக்கோட்டை அருகே பாழடைந்த கிணற்றுக்குள் தவறி விழுந்த விவசாயி படுகாயங்களுடன் மீட்கப்பட்டார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:46 PM
விவசாயி தங்கப்பாண்டியை மீடகும் தீயணைப்புத் துறையினர்.
பகிர்:

அருப்புக்கோட்டை அருகே பாழடைந்த கிணற்றுக்குள் தவறி விழுந்த விவசாயி படுகாயங்களுடன் மீட்கப்பட்டார். 

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே செட்டிகுறிச்சி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி தங்கப்பாண்டி (42). இவர் ஞாயிற்றுக்கிழமை வழக்கம் போல தான் வளர்க்கும் ஆடுகளுக்குக் குலை (உணவுக்கான பயிர்) பறித்துக்கொண்டிருந்த போது, அருகிலிருந்த பாழடைந்த கிணற்றுக்குள் நிலைதடுமாறி விழுந்து விட்டாராம். 

இதைக் கண்ட சக தொழிலாளி ஊரில் சொல்லியதில் தீயணைப்புத் துறையினர் நேரில் வந்து தங்கப்பாண்டியை உயிருடன் மீட்டனர். பின்னர் படுகாயங்களுடன் இருந்த அவரை அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →