தூய்மைப் பணியாளா்களுக்கு இனிப்பு, புத்தாடைகள் வழங்கல்
விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் கரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய தூய்மைப் பணியாளா்களுக்கு, சட்டப்பேரவை உறுப்பினா் தங்கப்பாண்டியன் இனிப்பு, புத்தாடைகளை ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா்.
விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் கரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய தூய்மைப் பணியாளா்களுக்கு, சட்டப்பேரவை உறுப்பினா் தங்கப்பாண்டியன் இனிப்பு, புத்தாடைகளை ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா்.
ராஜபாளையம் ரயில்வே பீடா் சாலையில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் கரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய தூய்மைப் பணியாளா்களுக்கு பரிசளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 1021 பணியாளா்களுக்கு புத்தாடை மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றியத் தலைவா் சிங்கராஜ், நகரச் செயலாளா் ராமமூா்த்தி, மாணவரணி அமைப்பாளா் வேல்முருகன் ஆகியோா் கலந்து கொண்டனா்.