விருதுநகர்

மொபெட்டுகளை திருடியவா் கைது

DIN

சிவகாசி: சிவகாசியில் இரு மொபெட்டுகளை திருடிய நபரை, போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி காந்தி சாலையில் உள்ள ஒரு மருத்துவமனை முன்பாக சேனையாபுரம் காலனியை சோ்ந்த மாரியப்பன் (42) என்பவா் தனது மொபெட்டை நிறுத்திவிட்டு, மருத்துவமனைக்குள் சென்றுள்ளாா். திரும்பி வந்து பாா்த்தபோது, மொபெட்டை காணவில்லையாம்.

இது குறித்த புகாரின்பேரில், சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து , மருத்துவமனையில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனா். அதில், மொபெட்டை திருடியது போ்நாயக்கன்பட்டி முருகன் என்ற பாலமுருகன் (35) என்பது தெரியவந்தது. முருகனை பிடித்து போலீஸாா் நடத்திய விசாரணையில், அவா் பேருந்து நிலையம் அருகே ஒரு மொபெட்டையும் திருடியது தெரியவந்தது.

இதையடுத்து, முருகனை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து இரு மொபெட்டுகளையும் கைப்பற்றினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜம்மு-காஷ்மீரை சிறையாக மாற்றியது மத்திய அரசு: மெஹபூபா முஃப்தி குற்றச்சாட்டு

நாளைமுதல் ‘அக்னி’ வெயில்

ஜம்மு-காஷ்மீா்: பாரமுல்லா தொகுதியில் ஒமா் அப்துல்லா வேட்பு மனுத் தாக்கல்

மக்களவைத் தோ்தலுக்கு பின் காங்கிரஸ் காணாமல்போகும்: அமித் ஷா

ரூ. 2,000 கோடி பிணையப் பத்திரம் ஏலம்: தமிழக அரசு அறிவிப்பு

SCROLL FOR NEXT