ராஜபாளையம் அருகே நூற்பாலையில் தீ விபத்து
ராஜபாளையம் அருகே தனியார் நூற்பாலையில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து திங்கட்கிழமை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ராஜபாளையம் அருகே தனியார் நூற்பாலையில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து திங்கட்கிழமை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே முதுகுடியில் ராமலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த தனியாருக்கு சொந்தமான நூற்பாலையில் காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து ஏற்பட்டதையடுத்து ராஜபாளையம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் தீயணைப்பு நிலைய அதிகாரி ஜெயராமன் மற்றும் தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் நூற்பாலையில் உள்ள நூல்கள் மற்றும் மூன்று இயந்திரங்கள் முற்றிலும் தீயில் எரிந்து சேதமாயின.
தீ விபத்து குறித்து ராஜபாளையம் தெற்கு காவல் நிலைய காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.