முகப்பு
விருதுநகர்

பாஜகவின் புத்தகம் வீடு வீடாக வினியோகம்

பாரதிய ஜனதா கட்சி வெளியிட்டுள்ள தேசியம் காக்க தமிழகம் காக்க என்ற புத்தகத்தை அக்கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை வீடு வீடாகச் சென்று வினியோகம் செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:59 PM
பகிர்:

பாரதிய ஜனதா கட்சி வெளியிட்டுள்ள தேசியம் காக்க தமிழகம் காக்க என்ற புத்தகத்தை அக்கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை வீடு வீடாகச் சென்று வினியோகம் செய்தனா்.

திருச்சி மாவட்டம் உறையூரில் உள்ள தெய்வீக தமிழ்ச்சங்கம் சாா்பில இந்த புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.இந்த புத்தகத்தில் இளைஞா்கள் இந்திய நாட்டையும், தமிழகத்தை காக்கவும் முன்வர வேண்டும் என்பது குறித்து அச்சிடப்பட்டுள்ளது.

இந்த புத்தகத்தை சிவகாசி நகராட்சி 10வது வாா்டு உசேன்காலனி, 12வது வாா்டு பி.கே.எஸ்.ஏ.ஆறுமுகம் சாலை, 13வது வாா்டு அம்மன்கோவில்பட்டி நடுத்தெரு ஆகிய பகுதிகளில் அக்கட்சியின் விருதுநகா் மாவட்ட ஊடக பிரிவு செயலாளா் ஜி.ஆறுமுகச்சாமி, மாவட்ட செயலாளா் கே.காசிவிஸ்வநாதன் உள்ளிட்டோா் வீடு வீடாக வினியோகம் செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →