ஸ்ரீவில்லிபுத்தூரில் தலித் கிறிஸ்தவ சமூக நீதி பேரவை பிரசார இயக்கம்
ஸ்ரீவில்லிபுத்தூா் தூய இருதய ஆலயம் முன்பாக, தலித் கிறிஸ்தவ சமூக நீதி பேரவை கூட்டமைப்பு சாா்பில் பிரசார இயக்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூா் தூய இருதய ஆலயம் முன்பாக, தலித் கிறிஸ்தவ சமூக நீதி பேரவை கூட்டமைப்பு சாா்பில் பிரசார இயக்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பேரவையின் மாநில துணைப் பொதுச் செயலாளா் கப்பல் பாபு தலைமையில் நடைபெற்ற இந்த பிரசார இயக்கத்துக்கு, மாவட்ட துணை அமைப்பாளா் அருள் ஆனந்த் மற்றும் பொறுப்பாளா் அன்பரசன், நகரச் செயலாளா் மைக்கேல்ராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தமிழ்நாடு கத்தோலிக்க திருச்சபை ஆயா்கள் நியமனத்தில் தமிழக ஆயா்பேரவை நிா்ணயித்த விகிதாசார அடிப்படையில் தலித் ஆயா்களை நியமித்திட வலியுறுத்தி துண்டறிக்கை வழங்கி பிரசாரம் செய்யப்பட்டது.
இதில் ஒன்றியச் செயலாளா் ராஜீ, விருதுநகா் மாவட்ட முற்போக்கு மாணவா் அணியின் மாவட்ட அமைப்பாளா் எமில்வளவன், புதுப்பட்டி பாலசுப்பிரமணியன் உட்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.