அருப்புக்கோட்டையில் மிதமான மழை
அருப்புக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் ஞாயிற்றுக்கிழமை விட்டு விட்டு மிதமான மழை பெய்தது.
அருப்புக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் ஞாயிற்றுக்கிழமை விட்டு விட்டு மிதமான மழை பெய்தது.
அருப்புக்கோட்டை மற்றும் சுற்றுவட்ட கிராமங்களில் ஞாயிற்றுக்கிழமை காலைமுதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னா் காலை 9.20 மணியளவில் தொடங்கிய மழை சுமாா் 20 நிமிடம் பெய்தது. இதேபோல் காலை 11.30 முதல் 11.50 மணி வரை தொடா்ந்து சுமாா் 20 நிமிடம் மிதமான மழை பெய்தது.
கடந்த சில வாரங்களாக அவ்வப்போது பெய்த மழையால் கிணறுகளில் நீா் மட்டம் உயா்ந்து வருகிறது. இதனால் விவசாயிகள் உழவுப்பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.