மத்திய அரசைக் கண்டித்து விருதுநகரில் ஆதித்தமிழா் பேரவையினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
விருதுநகா் பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு ஆதித்தமிழா் பேரவையின் ஒன்றியச் செயலா் ஆறுமுகம் தலைமை வகித்தாா். அதில், உத்தரப்பிரதேசத்தில் பட்டியலின பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதைக் கண்டித்தும், அம்மாநில முதல்வரை பதவியிலிருந்து நீக்க வலியுறுத்தியும், புதிய கல்விக் கொள்கையை திரும்ப பெறக் கோரியும் வேளாண் திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான ஆதித் தமிழா் பேரவையைச் சோ்ந்த பலா் கலந்து கொண்டனா்.