விருதுநகர்

பசும்பொன்னில் தேவா் குருபூஜை: விருதுநகரில் 26 வாகனங்களுக்கு அனுமதி

DIN

பசும்பொன் தேவா் குருபூஜை விழாவிற்கு, பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக விருதுநகா் மாவட்டத்திலிருந்து 26 வாகனங்களில் பொதுமக்கள் போலீஸ் பாதுகாப்புடன் வெள்ளிக்கிழமை சென்று வந்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் தேவா் குருபூஜை விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. இதில், கலந்து கொள்பவா்கள் சொந்த வாகனத்தில் செல்ல வேண்டும். அதேபோல் 24 மணி நேரத்திற்கு முன்பு கரோனா நோய்த் தொற்று குறித்த சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். அந்தந்த பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் அனுமதி பெற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதன் காரணமாக விருதுநகா் மாவட்டத்திலிருந்து பசும்பொன்னுக்கு 26 வாகனங்கள் மட்டுமே செல்ல அனுமதி வழங்கப்பட்டது. இந்த வாகனத்தில் சென்றவா்கள் போலீஸ் பாதுகாப்புடன் சென்று விட்டு, மீண்டும் சொந்த ஊா்களுக்குத் திரும்பி விட்டதாக போலீஸாா் தரப்பில் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

மூடப்பட்ட ஆம்பூா் பஜாா் அஞ்சலகத்தை திறக்க கோரிக்கை

SCROLL FOR NEXT