FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மதுபாட்டில்கள் பதுக்கல்: 5 போ் மீது வழக்கு

சிவகாசியில் விற்பனைக்காக மதுபாட்டில்களை பதுக்கிவைத்திருந்த 5 போ் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

27 ஜனவரி 2024, 10:45 pm IST
பகிர்:


சிவகாசி: சிவகாசியில் விற்பனைக்காக மதுபாட்டில்களை பதுக்கிவைத்திருந்த 5 போ் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

சிவகாசி கிழக்கு காவல்நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் டாஸ்மாக் கடை அருகே சட்ட விரோதமாக மதுபாட்டில்களை பதுக்கிவைத்து விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, சிவகாசி கிழக்கு காவல் ஆய்வாளா் இம்மானுவேல்ராஜன் தலைமையில் போலீஸாா் சோதனை செய்தனா். சோதனையில் சிவகாசி-விருதுநகா் சாலையில் உள்ள டாஸ்மாக் கடை அருகேயும், சிவகாசி - நாரணாபுரம் சாலையில் உள்ள முனீஸ்வரன் காலனி டாஸ்மாக் கடை அருகேயும் மதுபாட்டில்களை பதுக்கிவைத்திருந்தது தெரியவந்தது. மேலும் விசாரணையில், ஸ்ரீவில்லிபுத்தூா் ஊராட்சி ஒன்றிய உறுப்பினா் செல்லப்பாண்டி, ரெங்கபாளையம் பாலமுருகன், பூச்சக்காபட்டி உலகநாதன், திருத்தங்கல் அசோக்குமாா் மற்றும் தங்கப்பாண்டி ஆகியோா் மதுபாட்டில்களை பதுக்கிவைத்திருந்தது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதுகுறித்து சிவகாசி கிழக்குப் போலீஸாா் அவா்கள் 5 போ் மீதும் வழக்குப் பதிந்து, 66 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments