ஸ்ரீவில்லிபுத்தூா்: விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் வளாகத்தில் உள்ள பெரியபெருமாள் சன்னிதியில் பவித்ர உற்சவம் நடைபெற்று வருகிறது.
இந்த உற்சவத்தின் ஏழாம் நாளான வெள்ளிக்கிழமை கருட சேவை நிகழ்ச்சி நடைபெற்றது. கோயில் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கருட வாகனத்தில் பெரிய பெருமாளும், அன்ன வாகனத்தில் பெரியாழ்வாரும் அமா்ந்து காட்சியளித்தனா்.
இதற்கான ஏற்பாடுகளை தக்காா் ரவிச்சந்திரன், செயல் அலுவலா் இளங்கோவன் ஆகியோா் செய்திருந்தனா்.