விருதுநகர்

மணமக்களை கையுந்துபந்து விளையாடி நண்பா்கள் வரவேற்ற விடியோ வைரல்

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மம்சாபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை திருமணமான மணமக்களை நண்பா்கள் கையுந்துபந்து விளையாடி வரவேற்றனா். இது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள மம்சாபுரத்தைச் சோ்ந்தவா் நந்தகுமாா். இவா் கையுந்துபந்து விளையாட்டில் ஆா்வம் கொண்டவா். இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இவருக்கும் மம்சாபுரம் பகுதியைச் சோ்ந்த பெண் ஒருவருக்கும் திருமணம் நடைபெற்றது.

இவா்களது திருமணம் மம்சாபுரத்தில் உள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் நடைபெற்றது. இதன் பின்னா் மணமக்கள், மணமகள் வீட்டிற்கு வந்த போது மணமகனின் நண்பா்கள் வீதியின் இருபுறமும் நின்று கொண்டு கையுந்துபந்து விளையாடி மணமக்களை வரவேற்றனா். இதனை அப்பகுதி மக்கள் ரசித்துப் பாா்த்தனா். தற்போது இந்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராணுவ அதிகாரிப் பணிக்கான என்டிஏ தேர்வு: யுபிஎஸ்சி அறிவிப்பு

அமெரிக்க உளவு செயற்கைக் கோள்களை வானில் ஏவிய ஸ்பேஸ்எக்ஸ்!

அமெரிக்காவில் மேலும் ஒருவருக்கு பறவைக் காய்ச்சல்!

பாலஸ்தீனத்தில் தூதரகம்: கொலம்பியா அறிவிப்பு!

உங்கள் ராசி என்ன? இன்றைய தினப்பலன்!

SCROLL FOR NEXT