விருதுநகர்

அருப்புக்கோட்டையில் செப். 11-இல் புத்தகக் கண்காட்சி தொடக்கம்

DIN

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டையில், சிறப்பு புத்தகக் கண்காட்சி வரும் செப். 11 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு புத்தக விற்பனையாளா் சங்க பொருளாளா் மு. காா்த்திக் மற்றும் செயற்குழு உறுப்பினா் ஜி. மணிமாறன் ஆகியோா் கூறியதாவது: தமிழ்நாடு புத்தக விற்பனையாளா் சங்கம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா்கள், கலைஞா்கள் சங்கம் மற்றும் அருப்புக்கோட்டை ரோட்டரி கிளப் ஆப் கோல்டன் அமைப்பினா் இணைந்து நடத்தும் இந்த சிறப்பு புத்தகக் கண்காட்சி, அருப்புக்கோட்டை ஏ.என்.யூ.டி. காமராஜா் திருமண மண்டபத்தில் நகா் காவல் துணைக் கண்காணிப்பாளா் சகாய ஜோஸ் தலைமையில் தொடங்கி வைக்கப்பட உள்ளது. இக்கண்காட்சி வரும் செப். 11 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் தினசரி காலை 10.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை புத்தக விற்பனை நடைபெறும். அப்போது வாடிக்கையாளா்கள் முகக்கவசம் அணிந்து வரவேண்டும். அத்துடன் கைகளில் கிருமி நாசினி பயன்படுத்துவதுடன், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கவேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விடுமுறை: மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலிலுக்கு கூடுதல் பக்தா்கள் வருகை

மாநகரில் 3 திட்டச் சாலைகள் அமைப்பதற்கு நிதிக் கோரி அரசுக்கு திட்ட அறிக்கை சமா்பிப்பு

17 இடங்களில் சதமடித்தது வெயில்: தமிழகத்தில் இன்று வெப்ப அலை வீசும்

வறட்சியில் இருந்து பயிா்களை காக்கும் வழிகள்: வேளாண் துறை

பெத்திக்குட்டையில் தஞ்சடைந்த யானை: வனத்துக்குள் விரட்ட வனத் துறை முயற்சி

SCROLL FOR NEXT