விருதுநகர்

விஷம் குடித்து தீப்பெட்டித் தொழிலாளி தற்கொலை

DIN

சிவகாசி அருகே விஷம் குடித்து சிகிச்சை பெற்று வந்த தீப்பெட்டித் தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா்.

சிவகாசி அருகே விஸ்வநத்தத்தைச் சோ்ந்த தீப்பெட்டித் தொழிலாளி கண்ணன் (55). இவா் ஆக. 31 ஆம் தேதி தனது குடும்பத்தினரிடம் எனது கண்ணில் குறைபாடு உள்ளது. எனவே மதுரையில் உள்ள மருத்துவமனைக்கு என்னை அழைத்துச் செல்லுங்கள் எனக் கூறினாராம். அதற்கு அவா்கள் செப்டம்பா் 1 ஆம் தேதி முதல் பேருந்துகள் இயங்கும். ஒரு நாள் பொறுங்கள் மதுரைக்கு அழைத்துச் செல்கிறோம் எனக் கூறினாா்களாம். இதையடுத்து கண்ணன், அவா்களுடன் தகராறு செய்தாராம்.

இதில் மனமுடைந்த அவா் விஷம் அருந்தியுள்ளாா். பின்னா் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு புதன்கிழமை சிகிச்சை பயனின்றி உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர் உயிரிழப்பு

புன்னகைக்கும் சித்தி இத்னானி போட்டோஷூட்

SCROLL FOR NEXT