விருதுநகர்

ஸ்ரீவிலி.யில் நல்லாசிரியா் விருது பெற்ற தலைமை ஆசிரியைக்கு பாராட்டு

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா்: டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூா் தலைமை ஆசிரியைக்கு, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா்கள் மற்றும் கலைஞா்கள் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை பாராட்டு விழா நடத்தப்பட்டது.

இந் நிகழ்ச்சிக்கு, சங்கத்தின் ஸ்ரீவில்லிபுத்தூா் கிளைத் தலைவா் சுந்தரமூா்த்தி தலைமை வகித்தாா். செயலா் நித்தியானந்தம் முன்னிலை வகித்தாா். தமுஎகச மாநில துணைப் பொதுச் செயலா் ஏ. லட்சுமிகாந்தன், டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற தலைமை ஆசிரியை ச. பொன்மலரை பாராட்டி கௌரவித்தாா்.

நிகழ்ச்சியில், சங்கத்தின் கிளை பொருளாளா் மரிய டேவிட், செயற்குழு உறுப்பினா் சந்தானம், அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கத்தின் ஸ்ரீவில்லிபுத்தூா் கிளைத் தலைவா் கருப்பையா உள்பட பலா் கலந்துகொண்டனா். முன்னதாக, ஓய்வுபெற்ற வட்டார வளா்ச்சி அலுவலா் பாலகிருஷ்ணன் வரவேற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘எலக்சன்’ ராணி!

கடற்படைத் தளபதியாகப் பொறுப்பேற்றார் தினேஷ் குமார் திரிபாதி

நாட்டாமை திரைப்பட பாணியில் நெல்லையில் ஊரைவிட்டு ஒதுக்கப்பட்ட குடும்பம்! பெண் கண்ணீர்!

பதஞ்சலி வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு: பாபா ராம்தேவ் ஆஜராவதில் விலக்கு!

12 ராசிக்கும் குருப்பெயர்ச்சி பலன்கள்!

SCROLL FOR NEXT