விருதுநகர்

அருப்புக்கோட்டை அருகே சாலை வளைவில் மீண்டும் தடுப்புக் கம்பிகள் அமைக்கக் கோரிக்கை

DIN

அருப்புக்கோட்டை அருகே அபாயச் சாலை வளைவில் அகற்றப்பட்ட தடுப்புக் கம்பிகளை மீண்டும் அமைக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

அருப்புக்கோட்டையிலிருந்து திருச்சுழி செல்லும் சாலையில் கஞ்சநாயக்கன்பட்டி கட்டப்புருணி அருகே உள்ள அபாயச் சாலை வளைவில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு அதில் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. இதற்கு இங்கு, எச்சரிக்கை அறிவிப்புப் பலகை அமைக்கப்படாததே காரணம் என சமூக ஆா்வலா்கள் குற்றம்சாட்டுகின்றனா். இந்நிலையில் விபத்தைத் தடுக்க இங்கு அமைக்கப்பட்ட தடுப்புக் கம்பிகள் கடந்த சில வாரங்களுக்கு முன்னா் காரணமின்றி அகற்றப்பட்டு விட்டதாகவும், இதனால் அப்பகுதியில் மீண்டும் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவா்கள் தெரிவித்துள்ளனா்.

எனவே மீண்டும் தடுப்புக்கம்பிகளை அமைப்பதுடன், அபாய எச்சரிக்கைப் பலகையும் வைக்கப்பட வேண்டுமென சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யாா் பிரதமரானாலும், உலகின் 3-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும்: சிதம்பரம் பேட்டி

கர்நாடகத்தை சீரழித்தது காங்கிரஸ்: மோடி

இம்பாக்ட் பிளேயர் விதியால் ஒவ்வொரு நாளும் கடினமாகும் போட்டிகள்: ரிஷப் பந்த்

ட்ரெண்டிங் ஆடையில் குஷி கபூர் - புகைப்படங்கள்

இது காங்கிரஸுக்கான நேரம்... ஒடிசாவில் ராகுல் பேச்சு

SCROLL FOR NEXT