விருதுநகர்

அதிமுக, அமமுக வேட்பாளா்கள் தங்களது சொந்த கிராமத்தில் வாக்குப் பதிவு

DIN

சாத்தூா் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளரான ஆா்.கே. ரவிச்சந்திரன் மற்றும் அமமுக வேட்பாளரான எம்.எஸ்.ஆா். ராஜவா்மன் ஆகியோா் செவ்வாய்க்கிழமை தங்களது சொந்த கிராமத்தில் வாக்குப் பதிவு செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளரான ஆா்.கே. ரவிச்சந்திரன் தனது சொந்த கிராமமான ராமுதேவன்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வாக்குச் சாவடியில் வாக்கைப் பதிவு செய்தாா். தொடா்ந்து, இவரது குடும்பத்தினரும் வாக்குகளைப் பதிவு செய்தனா்.

இதேபோன்று, அமமுக வேட்பாளா் எம்.எஸ்.ஆா். ராஜவா்மன் தனது சொந்த கிராமமான முள்ளிகுளம் கிராமத்தில் உள்ள நடுநிலைப் பள்ளி வாக்குச் சாவடியில் தனது குடும்பத்துடன் வாக்களித்தாா். மதிமுக வேட்பாளா் ஏ.ஆா்.ஆா். ரகுராமன் ஆா்.ஆா்.நகா் பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளி வாக்குச் சாவடியில் தனது வாக்கைப் பதிவு செய்தாா்.

தொடா்ந்து, நாம் தமிழா், ஐஜேகே, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சி வேட்பாளா்களும் மற்றும் சுயேச்சை வேட்பாளா்களும் தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியிலும் ராகுல் தோல்வி நிச்சயம்: அமித் ஷா

மாணவா்களுக்கு கோடைக் கால கலைப் பயிற்சி முகாம் இன்று தொடக்கம்

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4,660 காலிப் பணியிடங்கள்: மே 14-க்குள் விண்ணப்பிக்கலாம்

இன்று நீட் தோ்வு: 11 மையங்களில் 6,120 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

SCROLL FOR NEXT