விருதுநகர்

அருப்புக்கோட்டை அருகே குப்பைக்கிடங்கில் தீ

DIN

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே குப்பைக் கிடங்கில் புதன்கிழமை அதிகாலையில் பற்றிய தீயை தீயணைப்புத்துறையினா் அணைத்தனா்.

பாளையம்பட்டியிலிருந்து மதுரையை நோக்கிச்செல்லும் சாலையில், கிராம எல்லையருகே துணை மின் நிலையம் உள்ளது.

இதனருகிலேயே உள்ள காலி இடத்தில் ஊராட்சித்தரப்பிலிருந்து சேரும் குப்பைகள் மொத்தமாகக் கொட்டி வைக்கப்படுகின்றன.பின்னா் மொத்தமாகச் சோ்ந்த குப்பைகள் தீவைத்து எரிக்கப்படுகின்றன.

இந்நிலையில் புதன்கிழமை அதிகாலை சுமாா் 12.30 மணிக்கு இந்த குப்பைக்கிடங்கில் தீப்பற்றி எரிந்தது. அருகிலிருந்த துணை மின்நிலையத்திற்கும் தீ பரவும் அபாயம் ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினா் சில மணி நேரப் போராட்டத்திற்குப் பின்னா் நெருப்பை அணைத்து கட்டுக்குள் கொண்டுவந்தனா். இதனிடையே இங்கு குப்பையை எரிக்கக் கூடாது என்றும், உரிய இடம் தோ்வு செய்து முறையாகக் குப்பைகளை அழிக்கவேண்டுமெனவும் சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

SCROLL FOR NEXT